search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஓ.எஸ்.மணியன்"

    கொள்ளிடம் அருகே பாதுகாப்பு வாகனத்தையும் மீறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் மீது டிராக்டர் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள கரையோர கிராமங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் முதலைமேடு திட்டு கிராமத்திலிருந்து கொள்ளிடம் நோக்கி கார்களில் சென்று கொண்டிருந்தனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரில், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது தண்டேசநல்லூர் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.

    அதனை பார்த்த பைலட் வாகனத்தில் சென்ற அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மெதுவாக செல்லுமாறு சைகை காட்டியும், டிராக்டர் நேராக அமைச்சர் சென்ற கார் மீது மோதியது. இதில் அமைச்சர் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். பாதுகாப்பு அதிகாரிகள் டிராக்டருடன் ஆச்சாள்புரத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் சிவராஜை கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர். 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கொள்ளிடம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடங்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோடிவிநாயகநல்லூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம், திருவிடைமருதூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்காடி புதிய கட்டிடம், துளசாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் கோபால் எம்.பி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிதலைவர்கள் அவை.பாலசுப்பி்ரமணியன் (தலைஞாயிறு), கிரிதரன் (தேத்தாக்குடி), மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    நாகை மாவட்டத்தில் 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    “2004 ம் ஆண்டு சுனாமி எனும் பேரிடரை தமிழகம் சந்தித்த போது, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசு அலுவலர்களை முடுக்கி விட்டு, சுனாமியால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வீடு, உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, உணவு, உடையின்றி தவித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், போர்க்கால அடிப்படையில் செய்திட அறிவுறுத்தினார். இதன் மூலம் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த போர்க்கால நடவடிக்கையினை பார்த்து உலகமே வியந்தது. இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவர்களது நிரந்தர வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிதியின் மூலம் தனியாரிடம் நிலம் வாங்கி நில ஆர்ஜிதம் செய்து, குடியிருப்புகள் கட்டப்பட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கு அடிமனைப் பட்டா வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கிராம மற்றும் வட்ட கணக்குகளில் உரிய பயனாளிகளின் பெயரில் மாற்றம் செய்து பட்டா வழங்கப்படுகிறது.

    சுனாமி நிரந்தர குடியிருப்புகள் வழங்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த குடியிருப்புகளை பழுது நீக்கம் செய்து கொள்ளவும், அல்லது வங்கிக்கடன் பெற்று புதிதாக கட்டிக்கொள்ள ஏதுவாகவும், பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இன்றைய தினம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகள் மேற்கோண்டு வருகிறது. சுனாமி வீடு பழுதுபார்ப்பதற்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன்வளக் கல்லூரியில் பயில மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வானகிரி, செருதூரில் முகத்து வாரங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகமும், தலைஞாயிறில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்திட தமிழக அரசு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மயிலாடுதுறை ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×